சக்திவாய்ந்த ஆயுதங்களை தயாரிக்க வட கொரியா முடிவு| Dinamalar

சியோல் : கிழக்காசிய நாடான வட கொரியா, உலக நாடுகளின் எதிர்ப்புகளை மீறி, தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

சமீபத்தில், அதிபர் கிம்மின் மேற்பார்வையில், அந்நாட்டின் மிகப்பெரிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையான, ‘வாசோங் – 17’ பரிசோதிக்கப்பட்டது.அமெரிக்ககாவை தகர்க்கும் திறனுடைய இந்த ஏவுகணையை வட கொரியா பரிசோதித்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், மேலும் பல சக்திவாய்ந்த ஆயுதங்களை வட கொரியா தயாரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.கடந்த வாரம், வாசோங் – 17 ஏவுகணையை தயாரித்த ஆராய்ச்சியாளர் குழுவை அதிபர் கிம் ஜோங் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:வெளிநாடுகளில் இருந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, மேலும் பல சக்திவாய்ந்த ஆயுதங்களை வட கொரியா தயாரிக்கும். அணு ஆயுதப் போர் மூண்டாலும், அதை தடுக்கும் வகையில், வட கொரியாவின் திறன் மேம்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.