சில மாதங்களுக்கு பிறகு.. வலியால் கதறுகிறேன்: வைரலாகும் ஐஸ்வர்யாவின் பதிவு..!

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
இயக்கத்தில் பிசியாக ஈடுபட்டு வருகிறார். அண்மையில் இவரின் ‘முசாபிர்’ ஆல்பம் பாடல் வெளியானது. இதனை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் நடிப்பில் ஐஸ்வர்யா புதிய படம் ஒன்று இயக்குவார் என கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது நேரடியாக பாலிவுட்டில் இயக்குனராக தடம் பதிக்கவுள்ளார்.

இந்திய சினிமாவில் பிரபல நடிகராக திகழும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் பரஸ்பரம் பிரிய உள்ளதாக அண்மையில் அறிவித்தது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.

விவாகரத்து அறிவிப்பிற்கு பிறகு ஐஸ்வர்யா மியூசிக் ஆல்பம் இயக்கும் வேளைகளில் இறங்கினார். இதற்காக ஐதராபாத்தில் தங்கி பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் ஐஸ்வர்யாவின் பயணி ஆல்பம் பாடல் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இதனை தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும், மற்ற மொழிகளில் மோகன்லால், மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் உள்ளிட்டோர் வெளியிட்டனர்.

நீங்களும் இப்படி பண்ணிட்டீங்களே நெல்சன்னா..?: கடும் அப்செட்டில் தளபதி ரசிகர்கள்..!

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா, தான் வொர்க் அவுட் செய்யும் படத்தை பகிர்ந்துள்ளார். சில மாதத்திற்கு பிறகு மீண்டும் வொர்க் அவுட் செய்வதாகவும், உடல் வலியால் கதறுவதாகவும் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் நம்முடைய உண்மையான சக்தியை யாரும் அறிய முடியாது என்றும் ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யா நேரடியாக இந்தி படம் ஒன்றை இயக்கவுள்ளதாக அண்மையில் அறிவித்துள்ளார். இதன் டைட்டில் லுக் போஸ்டரை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்த அவர், இந்தப்படம் உண்மையான காதல் கதையாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். ஐஸ்வர்யா தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் இருந்து
தனுஷ்
பெயரை நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வலிமை படத்தின் உண்மையான வசூல் எவ்வளவு தெரியுமா?

அடுத்த செய்திதனுஷ் இப்படி செய்வாருன்னு யாரும் எதிர்பாக்கல… செம ட்விஸ்ட்பா..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.