தாய்நாட்டிற்கு துரோகம் இழைத்து ரஷ்ய படைகளுடன் இணைந்த உக்ரைன் மேயர்!


உக்ரைனின் மேயர் ஒருவர் ரஷ்ய படைகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Balakliia மேயர் Ivan Stolbovyi ரஷ்ய படைகளுடன் ஒத்துழைக்கிறார் என கார்கிவ் ஆளுநர் Oleh Synehubov தெரிவித்துள்ளார்.

மேயர் Ivan Stolbovyi உக்ரைனுக்கு துரோகம் செய்துவிட்டார்.

ரஷ்யர்களுடன் இணைந்து மனிதாபிமான உதவி மையங்கள் அமைக்கப்பட்டதாக Ivan Stolbovyi அறிவிக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளதாக Oleh Synehubov தெரிவித்துள்ளார்.

ஊனமுற்ற நபரை கட்டையால் சரமாரியாக தாக்கிய ஜோடி! கமெராவில் சிக்கிய காட்சி 

உக்ரைன் மீது தொடர்ந்து 34 நாளாக படையெடுத்து வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவ்வை கைப்பற்ற தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.

இதற்கிடையில், இரு நாட்டு பிரதிநிதிகளும் துருக்கி நகரான இஸ்தான்புலில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எட்டப்படும் என நம்பப்படுகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.