புலி தாக்கி தொழிலாளி பலி வனத்துறை மீது குற்றச்சாட்டு| Dinamalar

குடகு-பொன்னம்பேட்டின், வி.பாடகா கிராமத்தில், புலி தாக்குதலுக்கு, விவசாய தொழிலாளி பலியானதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.குடகு பொன்னம்பேட்டின், வி.பாடகா கிராமத்தில் வசித்தவர் கணேஷ், 29. இவர் நேற்று மாலை, வயலில் மிளகு அறுவடையில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென புலி ஒன்று, அவரை தாக்கி கொன்றது. இந்த சம்பவம் கிராமத்தினரை, அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தகவலறிந்து அங்கு வந்த வனத்துறையினரிடம் கிராமத்தினர் அதிருப்தி தெரிவித்தனர். இப்பகுதியில் புலியின் நடமாட்டம் உள்ளதாக கூறியும், அதை பிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. வனத்துறையினரின் அலட்சியத்துக்கு, ஒரு உயிர் பலியானதாக சாடினர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.