ரூ. 100ஐ நெருங்கியது 10 நாளில் ரூ. 5 உயர்வு| Dinamalar

புதுச்சேரி : புதுச்சேரியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 10 நாட்களில் 5 ரூபாய் உயர்ந்து, ரூ.100ஐ நெருங்கி உள்ளது.புதுச்சேரியில் கடந்த ஆண்டு மே மாதம் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 90.56க் கும், டீசல் ரூ. 84.02க்கு விற்பனையானது. தொடர்ந்து விலை உயர்ந்ததால் நவம்பர் மாதத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 107.79க்கும், டீசல் ரூ. 102.66க்கு விற்பனையானது.விலையை குறைக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

இதைத் தொடர்ந்து, தீபாவளி பண்டிகையையொட்டி, கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு, பெட்ரோல் மீதான கலால் வரி ரூ. 5, டீசல் மீதான கலால் வரி ரூ. 10 குறைத்து அறிவித்தது.அதனால் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது.புதுச்சேரி அரசு சார்பில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி ரூ. 7 குறைத்து முதல்வர் ரங்கசாமி அரசாணை வெளியிட்டார்.அதனால் பெட்ரோல் விலை ரூ.107.79ல் இருந்து ரூ. 94.94 ஆகவும், டீசல் விலை ரூ.102.66ல் இருந்து ரூ. 83.58 ஆக விற்பனை செய்யப்பட்டது.

கடந்த 4 மாதங்களாக இந்த விலையில் எந்த மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டது. கடந்த 20ம் தேதி பெட்ரோல் ரூ.95.07க்கும், டீசல் ரூ.83.70க்கு விற்பனையானது.மறுநாள் முதல் தினசரி 30 பைசா முதல் 82 பைசா வரை உயர்ந்து வந்தது. 10 நாட்களில் லிட்டருக்கு ரூ. 5 வரை உயர்ந்தது.நேற்று புதுச்சேரியில் பெட்ரோல் லிட்டர் 78 பைசா உயர்ந்து ரூ.99.57க் கும், டீசல் 66 பைசா உயர்ந்து ரூ.88.08க்கு விற்கப்பட்டது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.