11ம் வகுப்பு மாணவி கழுத்தை அறுத்து இறந்து கிடந்த வழக்கில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர் சண்முகராஜ். இவருக்கு கற்பகவள்ளி என்ற மனைவியும் ஹர்த்திகா ராஜ் (17) என்ற மகளும் உள்ளனர். ஹர்த்திகா ராஜ் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.
சம்பவதன்று, பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு சென்றுவிடவே பள்ளி முடிந்து ஹர்த்திகா ராஜ் வீடுதிரும்பியுள்ளார். கற்பகவல்லி மாலை 6.40 மணியளவில் வீடுதிரும்பியுள்ளார். அப்போது ஹர்த்திகா ராஜ் சமையலறையில் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராட்டியுள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே ஹர்த்திகா ராஜ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் மாணவி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா? கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.