Dhanush:போதும் மாமா, போதும்: தனுஷ் அதிரடி முடிவு

ஒரு நடிகராக கோலிவுட்டுக்கு வந்தவர்
தனுஷ்
. பின்னர் தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர், பாடகர் அவதாரம் எடுத்தார். கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்றார்.

மேலும் ஹாலிவுட்டுக்கும் சென்று நல்ல பெயர் எடுத்திருக்கிறார். நடிகராக பல சாதனைகள் செய்த தனுஷ் ஒரு சுபயோக சுபதினத்தில் இயக்குநர் அவதாரம் எடுத்தார். ராஜ்கிரண் நடித்த ப. பாண்டியை இயக்கி வெளியிட்டார்.

படத்தை பார்த்த அனைவரும் இது முதல் படம் போன்றே இல்லை, அருமை என தனுஷை பாராட்டினார்கள். இயக்குநர் அவதாரம் எடுத்த கையோடு தன் தலைவர் ரஜினியை வைத்து படம் பண்ண வேண்டும் என்று தனுஷ் ஆசைப்பட்டார்.

மருமகனுக்கு நோ சொல்ல மாட்டார் ரஜினி. அதனால் நிச்சயம் இந்த கூட்டணி அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில்
ஐஸ்வர்யா
ரஜினிகாந்தை பிரிந்துவிட்டார் தனுஷ்.

ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ்ந்தபோதே நடக்காத விஷயம், தற்போது நடக்க வாய்ப்பே இல்லை என்று சினிமா ரசிகர்கள் பேசுகிறார்கள். இந்நிலையில் இனியும் ரஜினிக்காக காத்திருக்காமல் தானே இயக்கி, நடிக்க முடிவு செய்துவிட்டார் தனுஷ்.

இதுவா, அதுவா?: குழப்பத்தில் தனுஷ், மகிழ்ச்சியில் ரசிகர்கள்

மேலும் தான் இயக்கிய நாகர்ஜுனா பட வேலையை முடித்து ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டுள்ளாராம். தற்போது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி’அது’ கிடைச்சதும் சினிமாவ விட்டு ஓடி போயிருவேன்… ஓபனா பேசிய டாப்ஸி!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.