உலக இட்லி தினத்தை முன்னிட்டு 100 வகையான இட்லிகள் செய்த மாணவர்கள்

உலக இட்லி தினத்தையொட்டி, கோயம்புத்தூரில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கேட்டரிங் பயிலும் மாணவர்கள் 100 வகையான இட்லி தயார் செய்து காட்சிப்படுத்தினர்.

பாரம்பரிய தானியங்களால் ஆன இட்லி, தயிர் இட்லி, ரொட்டி இட்லி, ஆப்பிள் இட்லி, மல்லி இட்லி, குல்ஃபி இட்லி, பருப்பு இட்லி, சிக்கன் முட்டை இட்லி, காளான் இட்லி உள்ளிட்ட வகைவகையான இட்லிகள் காட்சிக்கு வைக்கப்பட்டன.

அத்துடன் இட்லிக்கு தொட்டுக் கொள்ள தேங்காய், வேர்க்கடலை, கேரட், வெங்காயம், பீட்ரூட், மாங்காய் என விதவிதமான சட்னிகளும் செய்து வைக்கப்பட்டிருந்தது பார்வையாளர்களை கவர்ந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.