சென்னை புறநகரில் உள்ள சுங்கச் சாவடிகளில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்வு.!

சென்னை புறநகரில் உள்ள வானகரம், சூரப்பட்டு சுங்கச் சாவடிகளில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணத்தை 10 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை அதிகரித்து மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த சுங்கச்சாவடிகளை அகற்ற தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், கட்டணத்தை உயர்த்தி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.