பாதாள சாக்கடை குழிக்குள் தவறி விழுந்தவரை காப்பாற்ற சென்றவர்களும் பலி… குழிக்குள் மூச்சுத் திணறி 4 பேரும் உயிரிழந்த பரிதாபம்

தலைநகர் டெல்லியில் மூடப்படாமல் இருந்த பாதாள சாக்கடை குழிக்குள் தவறி விழுந்தவரை காப்பாற்ற சென்ற 3 பேரும் சிக்கி கொண்டதையடுத்து, குழிக்குள் மூச்சுத் திணறி 4 பேரும் உயிரிழந்தனர்.

சஞ்சய் காந்தி டிரான்ஸ்போர்ட் நகரில் ரிக்ஷா ஓட்டுனர் ஒருவர் தவறி சாக்கடையில் விழுந்த நிலையில், அவரை காப்பாற்ற சென்ற தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த 3 தொழிலாளர்களும் சிக்கிக் கொண்டதாக அருகிலிருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உள்பட பலரும் மீட்க முயற்சி மேற்கொண்டனர். நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு 4 பேரும் சடலமாக மீட்கப்பட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.