30/03/2022: தமிழ்நாட்டில் இன்று 39 பேருக்கு கொரோனா பாதிப்பு 56 பேர் டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று கொரோனா உயிரிழப்பின்றி புதிதாக  39 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதுடன், 56 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு சுகாதாரத்துறை இன்று இரவு 7.45  மணி அளவில் வெளியிட்டுள்ள தகவலின்படி, மாநிலம் முழுவதும்  இன்று 30,095   சோதனைகள் செய்யப்பட்டு உள்ளன.

இன்று ஒரே நாளில் மேலும் 39 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 34,52,790 ஆக உயர்ந்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பலனின்றி  ஒருவரும் உயிரிழக்கவில்லை. மொத்த உயிரிழப்பு 38,025 ஆக உள்ளது. கடந்த ஒரு வாரமாக கொரோனா உயிரிழப்பு இல்லாதது தமிழக மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.

இன்று மேலும் 56  பேர்  கொரோனா தொற்று சிகிச்சையில் இருந்து குணமடைந்துள்ளதால், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 34,14,443 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது மாநிலம் முழுவதும் 322 பேர் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு:

அரியலூர் 0
செங்கல்பட்டு 2
சென்னை 18
கோவை 2
கடலூர் 0
தர்மபுரி 0
திண்டுக்கல் 0
ஈரோடு 0
கள்ளக்குறிச்சி 0
காஞ்சிபுரம் 1
கன்னியாகுமரி 0
கரூர் 0
கிருஷ்ணகிரி 0
மதுரை 0
மயிலாடுதுறை 0
நாகப்பட்டினம் 0
நாமக்கல் 0
நீலகிரி 2
பெரம்பலூர் 0
புதுக்கோட்டை 1
ராமநாதபுரம் 1
ராணிப்பேட்டை 1
சேலம் 0
சிவகங்கை 0
தென்காசி 1
தஞ்சாவூர் 1
தேனி 0
திருப்பத்தூர் 0
திருவள்ளூர் 2
திருவண்ணாமலை 0
திருவாரூர் 0
தூத்துக்குடி 1
திருநெல்வேலி 2
திருப்பூர் 0
திருச்சி 0
வேலூர் 3
விழுப்புரம் 1
விருதுநகர் 0

#tdi_1 .td-doubleSlider-2 .td-item1 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/03/tn-corona30-08-22-02.jpg) 0 0 no-repeat;
}
#tdi_1 .td-doubleSlider-2 .td-item2 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/03/tn-corona30-08-22-03.jpg) 0 0 no-repeat;
}
#tdi_1 .td-doubleSlider-2 .td-item3 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/03/tn-corona30-08-22-04.jpg) 0 0 no-repeat;
}

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.