இந்தியா-துபாய் இடையே விமானக் கட்டணம் குறைப்பு.!

இந்தியாவில் இருந்து துபாய் செல்லும் விமானக் கட்டணங்கள் குறைந்துள்ளன.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச விமான சேவைகளுக்கு கடந்த 27 ஆம் தேதி மத்திய அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து, தேவை காரணமாக இரு நாடுகளுக்கு இடையே இயக்கப்படும் விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதே இதற்கு காரணமாகும்.

டெல்லியில் இருந்து செல்லும் விமானங்களில் அதிகபட்ச கட்டணம் 30 ஆயிரம் ரூபாயில் இருந்து 16 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

ரமலான் மாதத்தில் பயணம் செய்ய விரும்புகிறவர்களுக்கு விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் பல்வேறு கட்டணச் சலுகைகளை அறிவித்துள்ளன. எமிரேட்ஸ் நிறுவனம் வாரத்துக்கு 170 விமான சேவைகள் என்று அதிகரித்துள்ளது.

இதே போன்று மற்ற விமான நிறுவனங்களும் இரு நாடுகளுக்கு இடையே விமானப் போக்குவரத்து சேவைகளை அதிகரித்துள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.