சமையல் எண்ணெய், எண்ணெய் வித்துக்கள் இருப்பு வரம்பு டிசம்பர் இறுதி வரை நீட்டிப்பு

சமையல் எண்ணெய்கள், எண்ணெய் வித்துக்கள் இருப்பு வைப்பதற்கான உச்ச வரம்பை டிசம்பர் இறுதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

உள்நாட்டில் சமையல் எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்தவும் பதுக்கலைத் தடுக்கவும் இருப்புக்கான உச்ச வரம்பை அரசு ஏற்கெனவே நடைமுறைப்படுத்தியுள்ளது. அதன்படி சில்லறை வணிகர்கள் 30 குவிண்டாலும், மொத்த வணிகர்கள் 500 குவிண்டாலும் சமையல் எண்ணெய் இருப்பு வைக்கலாம்.

சில்லறை வணிகர்கள் 100 குவிண்டாலும், மொத்த வணிகர்கள் இரண்டாயிரம் குவிண்டாலும் எண்ணெய் வித்துக்களை இருப்பு வைக்கலாம்.

இந்தக் கட்டுப்பாடு இன்றுடன் முடியவுள்ள நிலையில், இதை ஏப்ரல் 1 முதல் டிசம்பர் 31 வரை நீட்டித்து மத்திய அரசின் உணவு, நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.