தனுஷ் பல காலமா ஆசைப்பட்டது சிவகார்த்திகேயனுக்கு ஈஸியா கிடைச்சுடுச்சு

தனுஷ்
என்ன ஆசைப்பட்டார், சிவகார்த்திகேயனுக்கு என்ன கிடைத்தது என்று கேட்கிறீர்களா?.தன் தலைவர் ரஜினிகாந்துடன் சேர்ந்து ஒரு படத்திலாவது, குறைந்தது ஒரேயொரு காட்சியிலாவது நடிக்க வேண்டும் என்பது தான் தனுஷின் நீண்ட கால ஆசை.

Dhanush:அசிங்கப்பட்டு குமுறிக் குமுறி அழுத தனுஷ்
அவர் ரஜினியின் மருமகனாக இருந்தபோதே அந்த ஆசை நிறைவேறவில்லை. ஆனால் தனுஷ் ஆசைப்பட்டது சிவகார்த்திகேயனுக்கு கிடைத்திருக்கிறது.

தலைவர் 169 படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். நெல்சனின் நெருங்கிய நண்பர் சிவகார்த்திகேயன். தன் படங்களில்
சிவகார்த்திகேயன்
இருக்க வேண்டும் என்று விரும்புவர் நெல்சன்.

நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தில் பாடல் எழுதினார் சிவகார்த்திகேயன். அடுத்ததாக நெல்சன் இயக்கிய டாக்டர் படத்தின் ஹீரோவே சிவகார்த்திகேயன் தான். விஜய்யை வைத்து நெல்சன் இயக்கியிருக்கும் பீஸ்ட் படத்தில் பாடல் எழுதியிருக்கிறார் சிவா.

இந்நிலையில் தலைவர் 169 படத்தில் பாடல் மட்டும் எழுதாமல், சிறு கதாபாத்திரத்திலும் நடிக்கிறாராம் சிவகார்த்திகேயன்.

அந்த சிறு கதாபாத்திரம் தனக்கு கிடைக்காதா என்று தனுஷ் ஏங்கிக் கிடக்க சிவகார்த்திகேயனுக்கு கிடைத்திருக்கிறது.

மேலும் தலைவர் 169 படத்தில் ரஜினிக்கு மகளாக ப்ரியங்கா அருள்மோகன் நடிக்கிறார். தலைவர் 169 பட ஷூட்டிங் ஏப்ரல் மாதம் இறுதி அல்லது மே மாதம் துவக்கத்தில் துவங்குமாம்.

நெல்சன் இயக்கியிருக்கும் பீஸ்ட் படம் ஏப்ரல் 13ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அந்த வேலை முடிந்ததும் தலைவர் 169 பட வேலை துவங்கவிருக்கிறது.

அடுத்த செய்திஉண்மைகளை மறைக்கிறார் சிவகார்த்திகேயன்… அவரால் எனக்கு ரூ. 20 கோடி நஷ்டம்… ஞானவேல் பரபர!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.