தரகராக செயற்பட வேண்டாம்! – லண்டனில் இருந்து சுமந்திரன் எம்.பிக்கு வேண்டுகோள்



இலங்கை அரசாங்கத்தின் தரகராக செயற்பட வேண்டாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

லண்டனில் இருந்து வெளியாகும் விடுதலைப் புலிகள் அமைப்பு சார்பான இணையத்தளம் ஒன்றினால் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதான தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புலம்பெயர் தமிழர்கள் சார்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த எம்.ஏ.சுமந்திரனுக்கு அதிகாரம் இல்லை என குறித்த இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியல் கூறப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், எம்.ஏ. சுமந்திரன் லண்டன் வந்த போது தமிழ் மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தப்பிச் சென்றதாகவும் அந்த இணையத்தளத்தில் கூறப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.    



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.