திருவண்னாமலையில் 15 மலை கிராம மக்களின் பசியை போக்கும் சித்த மருத்துவர்.!

திருவண்னாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஜமுனாமரத்தூர் சுற்றுவட்டார 15 மலை கிராம மக்களுக்கு கேரள பெண் மருத்துவர் இலவசமாக உணவு வழங்கி வருகிறார்.

கேரளாவை சேர்ந்த சித்த மருத்துவர் நிலா நாதவர்மா, குடும்ப வாழ்வை துறந்து மலைக் கிராம மக்களுக்கு சேவையாற்றி வருகிறார்.

அவரது சேவையை கண்ட வனத்துறையினர் பயனற்று கிடந்த கட்டடத்தில் சமையல் செய்ய அனுமதித்துள்ளனர்.

கட்டடத்தின் அருகில் இருந்த காலி இடத்தில் இயற்கை முறையில் விவசாயம் செய்யும் நிலா நாதவர்மா அதில் கிடைக்கும் காய்கறிகளை கொண்டு மலைக் கிராம மக்களுக்கு உணவு வழங்கி வருகிறார்.    

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.