பீகார் சட்டப்பேரவையில் சட்டம் ஒழுங்கு குறித்து தொடர்ந்து முழக்கமிட்ட சிபிஐஎம்எல் உறுப்பினர்கள் வெளியேற்றம்..

பீகார் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட சிபிஐ எம்எல் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் 8 பேரை அவைக் காவலர்கள் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று அவையை விட்டு வெளியேற்றினர்.

பீகார் சட்டமன்றக் கூட்டத்தில் பேசிய சிபிஐஎம்எல் உறுப்பினர்கள் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலை மோசமடைந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டினர்.

அமரச் சொன்ன பிறகும் தொடர்ந்து முழக்கமிட்டதால் அவர்களை வெளியேற்றப் பேரவைத் தலைவர் உத்தரவிட்டார். இதையடுத்து 8 எம்எல்ஏக்களையும் அவைக்காவலர்கள் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று வெளியேற்றினர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.