20 ஓவர் போட்டிகளில் 7 ஆயிரம் ரன்களை கடந்து டோனி சாதனை..!!

மும்பை,
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் கடந்த 26 ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் 7-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் -சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
அதிரடியாக விளையாடிய சென்னை அணி வீரர்கள் சிக்சர் மழை பொழிந்தனர். உத்தப்பா அரைசதம் அடித்தார். இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 210 ரன்கள் குவித்தது.
211 ரன்கள் இலக்குடன் லக்னோ அணி விளையாடி வருகிறது. இந்த நிலையில் இந்த போட்டியில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் டோனி 6 பந்துகளில் 1 சிக்சர் உட்பட 16 ரன்கள் குவித்தார்.
இதன் மூலம் டோனி அனைத்து விதமான 20-வது ஓவர் போட்டிகளிலும் சேர்த்து 7 ஆயிரம் ரன்களை கடந்தார். இந்த சாதனையை படைக்கும் 6-வது இந்திய  வீரர் என்ற பெருமையை டோனி பெற்றுள்ளார். 
இதற்கு முன்  விராட் கோலி, ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான் மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர் 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.