16வயது சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த 45வயது நபர் போக்சோவில் கைது

கோவையில் 16 வயது சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த 45 வயது நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவருக்கும் 12 ஆம் வகுப்பு படித்து வரும் 16 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அந்த சிறுமியை காதலிப்பதாகவும்  திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி திருப்பதி அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டது மட்டுமின்றி பல இடங்களுக்கு அழைத்து சென்று செந்தில் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் திருச்செந்தூரில் தங்கி இருந்த செந்திலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.