எதிர்க்கும் பல நாடுகள்… கண்டுகொள்ளாமல் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா

அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை இந்தியா கொள்முதல் செய்ய உள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டி உயர்ந்துள்ள நிலையில் அதன் எதிரொலியாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உயர்வில் இருந்து வருகிறது. இதனால் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டுள்ள நிலையில் இதற்கு தீர்வு காண மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டுள்ளது.
இந்தியாவுக்கு தரமான உரால் ரக கச்சா எண்ணெயை போருக்கு முந்தைய விலையில் இருந்து 35 டாலர் குறைவாக வழங்க ரஷ்யா முன்வந்ததாக தகவல்கள் வெளியாகின. ரஷ்ய அமைச்சர் செர்கை லாவ்ரோவின் டெல்லி வருகையின் போது இது குறித்து பேசப்பட்டது.

image
இதைத்தொடர்ந்து கச்சா எண்ணெயை ரஷ்யாவிடமிருந்து வாங்குவதை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி செய்துள்ளார். எனினும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதை அமெரிக்கா கடுமையாக எதிர்த்து வருகிறது. இதனால் ரஷ்யாவுக்கு தாங்கள் விதித்த பொருளாதார தடைகள் பலனளிக்காமல் போகும் என அமெரிக்கா கருதுகிறது.
நேற்று முன்தினம் வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷவர்தனுடன் பேசிய அமெரிக்க தேசிய துணை பாதுகாப்பு ஆலேசாகர் தலீப் சிங், இந்தியாவில் சீனா அத்துமீறும் போது ரஷ்யா உதவிக்கு வராது என தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவை வர்த்தக ரீதியாக சார்ந்திருப்பதை குறைத்துக்கொள்ளுமாறு அண்மையில் டெல்லி வந்திருந்த இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ்-உம் வலியுறுத்தியிருந்தார். இவற்றை புறந்தள்ளிவிட்டு ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்க உள்ளது. எங்கள் நாட்டின் எரிசக்தி பாதுகாப்புதான் முதன்மையானது என்றும் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் கிடைத்தால் அதில் என்ன தவறு என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிக்க: பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.