கல்லூரி விழாவில் பெண் கலெக்டர் அசத்தல் நடனம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், பத்தனம்திட்டா  மாவட்ட கலெக்டராக இருப்பவர் டாக்டர் திவ்யா எஸ். ஐயர். இவர் காங்கிரஸ்  முன்னாள் எம்எல்ஏ சபரிநாதனின்  மனைவி.   இந்நிலையில்,  பத்தனம்திட்டாவில் உள்ள கத்தோலிக்க கல்லூரியில் மகாத்மா காந்தி பல்கலைக் கழக  கலைவிழா நடந்தது. இதை தொடங்கி வைப்பதற்காக கலெக்டர்  திவ்யா எஸ்.ஐயர் வந்திருந்தார். விழா தொடங்கியதும் மாணவ,  மாணவிகள் சினிமா பாடலின் பின்னணியில் விழிப்புணர்வு நடனமாடினர். அதை  ரசித்து கொண்டிருந்த கலெக்டர் திவ்யா, திடீரென எழுந்து சென்று மாணவ, மாணவிகளுடன் சேர்ந்து நடனம்  ஆடினார். இதனால், மாணவர்கள்  உற்சாகம் அடைந்தனர்.    இந்த வீடியோ தற்போது  சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கலெக்டர்  திவ்யா எஸ்.ஐயர் பள்ளி  பருவத்தில் இருந்தே பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் நடனமாடி ஏராளமான பரிசுகளைப்  பெற்றுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.