தடகள வீராங்கனை சமீஹா பர்வீனுக்கு 2 லட்ச ரூபாய் ஊக்கத்தொகை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

கன்னியாகுமாரி மாவட்டத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை சமீஹா பர்வீனுக்கு 2 லட்ச ரூபாய் ஊக்கத்தொகை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கடையாலுமூடு பகுதியைச் சேர்ந்த சமீஹா பர்வீன் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான காதுகேளாதோருக்கான தடகளப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அவரை மேலும் ஊக்குவிப்பதற்காக 2 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு போலந்தில் நடைபெற்ற உலக காது கேளாதோருக்கானத் தடகளப் போட்டியில் பங்கேற்ற சமீஹா பர்வீன், மணிகண்டன் மற்றும் சுதனுக்கு தலா 30,000 ரூபாய் வழங்கப்பட்டது.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.