மின்துண்டிப்பு: பாடசாலைகளுக்கு ஏப்ரல் விடுமுறையை முன்கூட்டியே வழங்க ஆலோசனை

தற்போது நிலவும் நீண்ட நேர மின்துண்டிப்பு காரணமாக பாடசாலை மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கவனத்திற்கொண்டு, ஏப்ரல் மாத விடுமுறையை சில தினங்களுக்கு முன்னதாக வழங்குமாறு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, கல்வி அமைச்சை கேட்டுக்கொண்டுள்ளது.

இதற்கமைவாக 4 ஆம் திகதி முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க கல்வி அமைச்சை கோரியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.