உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் மக்களுக்கு உற்சாகமூட்ட இசை கச்சேரி நடத்திய கலைஞர்கள்..

உக்ரைன் நாட்டின் ஒடிசா நகர் மீது ரஷ்ய படைகள் ஏவுகணைத் தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ள நிலையில், அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்தபடி கலைஞர்கள் இசை கச்சேரி நடத்தினர்.

துறைமுக நகரான ஒடிசா-வில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் எரிபொருள் சேமிப்பு கிடங்குகளை ரஷ்ய ராணுவம் வான் தாக்குதல் நிகழ்த்தி அழித்தது.

போர் சூழலால் பதற்றத்துடன் காணப்படும் ஒடிசா நகரவாசிகளுக்கு உற்சாகமூட்டும் விதமாக கலைஞர்கள் இசை கச்சேரி நடத்தினர். அங்கிருந்த மக்கள் சில நிமிடங்கள் கவலைகளை மறந்து நடனமாடினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.