ஊரடங்குச்சட்டம்: இதுவரை 664 பேர் கைது

நாட்டின் தற்போதைய நிலையைக் கருத்திற்கொண்டு அமைதியான முறையில் செயற்படுமாறு அரசாங்கம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கலகம் ஏற்படுத்தும் வகையில் சிலர் செயற்படலாம் என அரசாங்கத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. ஆகையினால் நாடு தழுவிய ரீதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்குச்சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் இதுவரை 664 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் நேற்று மாலை 6.00 மணியிலிருந்து நாளை காலை 6.00 மணி வரை ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை அத்தியாவசியப் பணிகளுக்காகச் செல்வோர் தமது அலுவலக அடையாள அட்டையைக் காண்பித்து பணிக்குச் செல்ல முடியும். அத்துடன்இ விமான சேவைகள் வழமை போன்று இடம்பெறுகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.