கவனக்குறைவாக சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதிய அரசு பேருந்து.. இருவர் பலி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அவசரகதியில் கவனக்குறைவாக சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது, அரசு பேருந்து மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் காட்சிகள் வெளியாகியுள்ளன.

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வீரன் மற்றும் தர்மன் ஆகியோர் வெம்பக்கோட்டையில் தங்கி வேலை பார்த்து வந்த நிலையில், இருவரும் இருசக்கர வாகனத்தில் அக்கரைப்பட்டியில் இருந்து வெம்பக்கோட்டை நோக்கி சென்றுக் கொண்டிருந்தனர். வீரன் பைக்கை ஓட்டிச் செல்ல தர்மன் பின்னால் அமர்ந்து சென்றிருக்கிறார்.

வீரகாளியம்மன் கோவில் விலக்கு அருகே பேருந்து வருவதை கவனிக்காமல் இணைப்புச் சாலையில் இருந்து நெடுஞ்சாலையை கடக்க முயன்ற வீரன், பேருந்து வருவதைக் கண்டதும் நடுரோட்டில் பதற்றத்தில் பைக்கை நிறுத்த முயன்றுள்ளார்.

ஆனால், அதற்குள் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதிய நிலையில், அதில் பயணம் செய்த இருவரும் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டனர்.

இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.