சிவகங்கையில் உலக சாதனைக்கு தடை விதித்த போலீசார்!

சிவகங்கை மாவட்டத்தில் இலங்கை பிரமுகர் ஒருவர் குழிக்குள் அமர்ந்து மேலே தீயிட்டு உயிரை பணயம் வைத்து தியானம் செய்யும் உலக சாதனை நிகழ்ச்சி காவல்துறையின் உரிய அனுமதி பெறாததால் தடுத்து நிறுத்தப்பட்டது.

சோழன் புக் ஆப் ரெக்கார்ட் நிறுவனத்தின் சார்பில் காமராஜர் காலனி அருகே இலங்கையை சேர்ந்த மொஹமத் முசாதிக் என்பவர் தரையில் குழி அமைத்து உள்ளே அமர்ந்து மேலே பலகையால் மூடி அதற்கு மேல் விறகுகளை அடுக்கி அதில் தீயிட்டு உள்ளேயே  ஒன்றரை மணி நேரம் தியானம் செய்யும் நிகழ்ச்சி நேற்று நடைபெற இருந்தது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட காவல்கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமை தாங்குவதாக அழைப்பிதழ் அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதனைக்  காண ஏராளமான பொது மக்களும் அப்பகுதியில் கூடி இருந்தனர். இந்நிலையில் அந்த நிகழ்ச்சிக்கு முறையாக அனுமதி பெறவில்லை எனக் கூறி சிவகங்கை நகர் காவல்துறையினர் நிகழ்ச்சியினை தடுத்து நிறுத்தியதால் மக்கள் ஏமாற்றத்திற்கு ஆளாயினர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.