பிரதமர் பதவி விலகுவதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை! பிரதமர் அலுவலகம் மறுப்பு


பிரதமர் மஹிந்த ராஜபக்ச தமது பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்திருப்பதாக வெளியாகியுள்ள செய்தியை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ள நிலையில்,அதனை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏற்க மறுத்துள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்த நிலையில்,இந்த மறுப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தமது பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்திருப்பதாக உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டதாக தகவல் வெளியான நிலையில், தற்போது குறித்த செய்தி வெளியாகியுள்ளது.

அரசியல் நெருக்கடியை தவிர்ப்பதற்காக இடைக்கால அரசொன்றை அமைக்கும் நோக்கில் மஹிந்த பிரதமர் பதவியை துறக்கத் தீர்மானித்துள்ளதாகவும் கூறப்பட்டிருந்தமையும்,குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பிரதமர் மகிந்த ராஜபக்ச அவசரமாக இன்று இரவு சந்திக்கவுள்ளார். 

நாட்டில் நிலவும் தற்போதைய பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது. 

இருப்பினும்,பிரதமர் மஹிந்த ராஜபக்ச தமது பதவி விலகியமை தொடர்பில் எவ்வித உத்தியோகபூர்வ தகவல்களும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Gallery

Gallery



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.