முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழ்நாட்டை மாற்றியிருப்பதாக முதலமைச்சர் தகவல்

முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழ்நாட்டை மாற்றியிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவர் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், அதனால் வந்த முதலீடுகள், வேலைவாய்ப்புகள் தொடர்பான தரவுகளை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதன் மூலம் 68 ஆயிரத்து 375 கோடி ரூபாய் முதலீட்டை தமிழகம் ஈர்த்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது பற்றி குறிப்பிட்ட முதலமைச்சர், மாநில வளர்ச்சிக்கும் – தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்துக்கும் அரசின் செயல்பாடுகள் துணை நிற்கும் என்றார்.

மேலும், திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு மேற்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வளர்ச்சிக்கான அடித்தளம் என முதலமைச்சர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.