முதல் டெஸ்ட் போட்டி : வங்காளதேச அணிக்கு 270 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்கா

டர்பன்,
வங்காளதேச அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இரு அணிகளும்  முதல் டெஸ்டில் மோதி வருகிறது.
 
இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி  முதலில் களமிறங்கிய  தென் ஆப்பிரிக்க அணி 121 ஓவர்கள் முடிவில் 367 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. அணியில் அதிகபட்சமாக பவுமா 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

இதையடுத்து  தனது முதல் இன்னிங்சில் விளையாடிய
வங்காளதேச அணி 298 ரன்களுக்கு 10 விக்கெட்டுக்களை இழந்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக மஹ்முதுல் ஹசன் ஜாய் சிறப்பாக விளையாடி சதமடித்து  137  ரன்களுக்கு  ஆட்டமிழந்தார் 
இதனால்  வங்காளதேச அணி 298 ரன்களுக்கு 10 விக்கெட்டுக்களை இழந்து ஆட்டமிழந்தது.இதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்க்சில்  விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது .இதனால் 10 விக்கெட்டுக்களை  இழந்து 204 ரன்களுக்கு  ஆட்டமிழந்தது தென் ஆப்பிரிக்கா.
இதனால்  69 ரன்கள் முன்னிலையுடன் 270 ரன்களை இலக்காக நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்கா .
இந்த இலக்கை நோக்கி  விளையாடிய வங்காளதேச அணி 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3விக்கெட்டுக்களை இழந்து 11 ரன்கள் எடுத்துள்ளது . கடைசி நாள் ஆட்டம் இன்று நடக்கிறது .
 கடைசி நாள் ஆட்டம் இன்று நடக்கிறது. வங்காளதேச அணிக்கு  வெற்றி பெற 263 ரன்கள் தேவைப்படுகிறது .

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.