வேகமாக பரவும் கொரோனா புதிய திரிபு: விரைவில் ஊரடங்கு?

கொரோனா
வைரஸால் கடும் நெருக்கடியில் தள்ளப்பட்ட உலக மக்களுக்கு, கொரோனா தடுப்பூசிகளால் தற்போது புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. இதனிடையே, ஏற்கெனவே பரவி வரும் வைரஸை விட வேகமாக பரவக்கூடிய தன்னைத் தானே தகவமைத்துக் கொண்ட புதிய கொரோனா திரிபுகள் கண்டறியப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கொரோனா வைரஸின் புதிய திரிபான எக்ஸ்இ உலகம் முழுவதும் பரவி வரகிறது. இது அதிவேமாக பரவக்கூடியது என்று
உலக சுகாதார அமைப்பு
எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு கூறியதாவது, “ஒமைக்ரான் வைரஸின் பிஏ.2 துணை மாறுபாட்டை விட எக்ஸ்இ எனப்படும் கொரோனா வைரஸின் புதிய திரிபானது, 10 சதவீதம் அதிகமாக பரவ வாய்ப்புள்ளது. தற்போது வரை, ஒமைக்ரானின் பிஏ.2 துணை மாறுபாடு கொரோனா வைரஸ்களில் மிகவும் தீவிரமானதாக கருதப்படுகிறது. எக்ஸ்இ தொடர்பான புதிய ஆராய்ச்சி உறுதிசெய்யப்பட்டால், அது இன்னும் தீவிரமாக பரவக்கூடிய கொரோனா வகையாக இருக்கும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவியில் நீடிப்பாரா இம்ரான் கான்: இன்று ஒட்டெடுப்பு!

கொரோனா வைரஸின் எக்ஸ்இ எனப்படும் புதிய மாறுபாடு ஓமைக்ரானின் பிஏ.1 மற்றும் பிஏ.2 ஆகிய இரண்டு மாறுபாடுகளின் பிறழ்ந்த கலப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஜனவரி மாதம் இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ளது. இதேபோன்றதொரு திரிபு பிரான்ஸ், டென்மார்க், பெல்ஜியம் போன்ற நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதாக கருதப்படும் நிலையில், உலக சுகாதார அமைப்பின் இந்த அறிவிப்பானது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கொரோனா மூன்றாவது அலையின் போது அதாவது ஒமைக்ரான் பாதிப்பின் போது, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் அதனை கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்தன.

தற்போது அதனை விட அதிவேகமாக பரவும் புதிய திரிபு பரவி வருவதால், மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சமும் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்திபதவியில் நீடிப்பாரா இம்ரான் கான்: இன்று ஒட்டெடுப்பு!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.