"அவர்கள் முதலில் தமிழர்களிடம் வந்தார்கள்".. சிங்களர்கள் குமுறல்!

சிங்களர்கள்
மிகப் பெரும் குமுறலிலும், வேதனையிலும், விரக்தியிலும், கொந்தளிப்பிலும் உள்ளனர். ராஜபக்சே சகோதரர்களை நம்பி இப்படி மோசம் போய் விட்டோமே என்ற வெறுப்பின் உச்சத்தில் சிங்களர்கள் உள்ளனர்.

ஈழத்தில் விடுதலைப் புலிகள் உயிர்ப்புடன் இருந்தபோது,
பிரபாகரன்
தலைமையிலான விடுதலைப் புலிகள் வசம் ஈழம் இருந்தபோது அங்கு எந்த அடிப்படைப் பிரச்சினையும் ஏற்பட்டதில்லை. ஒரு அரசாங்கத்தையே நடத்தி வந்தனர் புலிகள். கோர்ட் வைத்திருந்தனர், சிறைச்சாலை வைத்திருந்தனர். நிர்வாகம் சிறப்பாக இருந்தது. புலம் பெயர்ந்த தமிழர்களின் உதவியுடனும், உள்ளூர் தமிழர்களின் ஒத்துழைப்புடனும் ஈழம் சிறப்பான நிலையில்தான் இருந்தது.

மறுபக்கம் சிங்களப் படையுடன் மோதல்களிலும் ஈடுபட்டிருந்தனர். தங்களுக்கு எதிராக செயல்பட்ட சிங்களத் தலைவர்களை மட்டுமே அவர்கள் குறி வைத்தனர். சிங்கள மக்களை அவர்கள் ஒருபோதும் குறி வைத்தது இல்லை. சிங்கள மக்களை தங்களது சகோதரர்களாக மட்டுமே நினைத்தனர். ஆனால் சிங்களர்கள் மத்தியில் புலிகள் குறித்தும்,
தமிழர்கள்
குறித்தும் அவதூறு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த விஷமப் பிரசாரம் காரணமாக இரு இனத்தவரிடையே நீங்காப் பகை உணர்வு உருவாக்கப்பட்டது.

கோத்தபயா வீட்டுக்கு வெளியே “அட்டாக்”.. தீவிரவாதிகள் அட்டகாசம் இது.. அலறும் இலங்கை!

இந்த பகை உணர்வை ஊதிப் பெரிதாக்கிய புண்ணியம் ராஜபக்சே சகோதரர்களுக்கே அதிகம். தமிழர்கள் ஆபத்தானவர்கள், தமிழர்களால்தான் சிங்களர்கள் அவதிப்படுகின்றனர் என்று பிரசாரம் செய்து செய்தே சிங்கள மக்களுக்கு வெறியூட்டினர். அது மட்டுமா, இஸ்லாமியர்கள் குறித்தும் அவதூறு கிளப்பப்பட்டது. இரு இனத்தவரும் சிங்களர்களுக்கு எதிரானவர்கள் என்ற தோற்றம் உருவாக்கப்பட்டது. அதில்தான் இந்த சிங்கள தலைவர்கள் குளிர் காய்ந்தனர். இப்படி இனங்களுக்குள் சண்டை மூட்டி விட்டு, மறுபக்கம் தங்களது சுய நலத்துக்காக நாட்டையே விற்கும் அளவுக்குப் போய் விட்டனர். ஹம்பந்தோட்டா துறைமுகம் சீனர்கள் வசம் போய் விட்டது. ஏகப்பட்ட கடன்கள். அத்தனை கடன்களையும் அடைக்க முடியாத நிலை. பண வீக்கம், வீழ்ச்சி அடைந்த பொருளாதாரம், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி என நாலாபுறமும் இறுகப் பிடித்த அரக்கக் கரங்களுக்குள் சிக்கிக் கொண்டனர் ராஜபக்சே சகோதரர்கள்.

இது நாள் வரை தங்களைக் காப்பார்கள் என்று நம்பியவர்கள் போட்டு வந்த வேஷம் இன்று அம்பலமாகி விடவே சிங்கள மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். நாடே மூழ்கிப் போகும் நிலைக்கு வந்து விட்டது. இப்போதுதான் தமிழர்களின் அருமை அவர்களுக்குத் தெரிகிறது, இஸ்லாமியர்கள் நமது சகோதரர்கள் என்ற புத்தி வந்துள்ளது. இதை ஒரு போஸ்டர் மூலம் சிங்கள மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர். அதுதான் தற்போது வைரலாகி வருகிறது.

சீனா தாக்கினால் ரஷ்யா உதவிக்கு வராது.. இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

ராஜபக்சே அரசுக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் இந்த போஸ்டரை கையில் ஏந்தி நிற்கிறார். அதில் இப்படி எழுதப்பட்டுள்ளது:

“முதலில் அவர்கள் தமிழர்களிடம் வந்தனர்.

நான் பேசவில்லை.. ஏனென்றால் நான் தமிழ் அல்ல.

பிறகு அவர்கள் முஸ்லீம்களிடம் வந்தனர்.

அப்போதும் நான் பேசவில்லை.. காரணம் நான் முஸ்லீம் அல்ல.

இப்போது அவர்கள் என்னிடம் வந்துள்ளனர்.

ஆனால் எனக்காக பேச யாரும் இல்லை”

எத்தனை வலி நிறைந்த வாக்கியங்கள் பாருங்கள். ஆனால் இன்று ஈழம் வலுவுடன் இருந்திருந்தால், ஒரு வேளை விடுதலைப் புலிகளும் துடிப்புடன் இருந்திருந்தால், கூடவே பிரபாகரனும் இருந்திருந்தால்.. நிச்சயம் சிங்கள மக்களை இப்படி கஷ்டப்பட விட்டு வேடிக்கை பார்த்திருக்க மாட்டார்கள்.. ஓடி வந்து உதவியிருப்பார்கள்.. இதை நாம் சொல்லவில்லை.. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிங்களர்கள்தான் இதையும் சொல்கிறார்கள்.

அடுத்த செய்திபுதிய பிரதமர்: பாக்., எதிர்க்கட்சிகள் அறிவிப்பால் குழப்பம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.