இதுக்கெல்லாம் அது மட்டும்தான் காரணம் : சமந்தா

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் சமந்தா.
விண்ணை தாண்டி வருவாயா
என்ற படத்தில் அறிமுகமான
சமந்தா
பானா காத்தாடி படத்தின் மூலம் நாயகியானார். தமிழ் மற்றும் தெலுங்கில் சில படங்களில் நடித்துவந்த சமந்தாவிற்கு
கத்தி
படத்தில் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார் சமந்தா. அதன் பின்
சூர்யா
, விஷால், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையானர். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகின்றார் சமந்தா.

விஜய்யின் படத்தை நான் பார்த்ததே கிடையாது…பிரபல இயக்குனர் ஓபன் டாக்..!

இந்நிலையில் கடந்தகாண்டு சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவை பிரிந்தார். அவர்களின் பிரிவிற்கு பல காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில் சமந்தா சில படங்களில் கவர்ச்சியாக நடித்ததுதான் முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றது.

சமந்தா

பேமிலி மேன் என்ற வெப் தொடரில் சமந்தா நடித்தது சற்று சர்ச்சையை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து விவாகரத்திற்கு பிறகு சமந்தா அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான
புஷ்பா
படத்தில் ஓ சொல்றியா பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் ஆடினார்.

இந்த பாடல் சில சர்ச்சைகளை கிளப்பினாலும் இளைஞர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதன் மூலம் சமந்தாவிற்கு பல பாலிவுட் பட வாய்ப்புகளும் வருவதாக தகவல்கள் வருகின்றன. இந்நிலையில் தற்போது தென்னிந்திய திரையுலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக சமந்தா திகழ்கின்றார்.

சமந்தா

இதையடுத்து அவர் மும்பையில் ஒரு ஆடம்பரமான வீட்டை வாங்கவுள்ளாராம். தற்போது பாலிவுட் படவாய்ப்புகளும் சமந்தாவிற்கு வருவதால் மும்பையிலும் ஒரு வீட்டை வாங்க முடிவெடுத்துள்ளார்.

கடற்கரையை ஒட்டி இருக்கும் அந்த வீட்டின் மதிப்பு கிட்டத்தட்ட ஐந்து கோடியாம். புஷ்பா படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி தன் மார்க்கெட்டை பல மடங்கு உயர்த்தியுள்ளார் சமந்தா என்பது குறிப்பிடத்தக்கது

ரொம்ப கஷ்டத்துல இருக்கோம் – நடிகர் விஷால் பேச்சு!

அடுத்த செய்தி800 கோடிப்பே.. தொடர் வசூல் வேட்டையில் ‘ஆர் ஆர் ஆர்’: ஆடிப்போன திரையுலகம்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.