குதிரையுடன் பழகும் கார்த்தி

பொன்னியின் செல்வன், முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் விருமன் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் நடிகர் கார்த்தி. இப்படங்களுக்கு பிறகு இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கும் சர்தார் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கார்த்தி குதிரையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் குதிரையுடன் இருப்பது எனக்கு எப்போதும் உற்சாதத்தை ஏற்படுத்தும். காஷ்மோரா படத்தின் படப்பிடிப்பின்போது குதிரை ஏறுவதை கற்று கொண்டேன். அதன்பிறகு நான் நினைத்ததை எல்லாம் பொன்னியின் செல்வன் படத்தின்போது செய்தேன். அதனால் கிடைத்த உற்சாகத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.