தூத்துக்குடியில் பதநீர் விற்பனை செய்து அதில் வரும் வருமானம் மூலம் பள்ளி ஒன்றை நடத்தி வரும் கிராம மக்கள்.!

தூத்துக்குடி மாவட்டம் அந்தோணியார்புரம் அருகே பதநீர் விற்பனை செய்து அதில் வரும் வருமானம் மூலம் பள்ளி ஒன்றை கிராம மக்கள் நடத்தி வருகின்றனர்.

  கோரம்பள்ளம் கிராமத்தில் ஆர்.சி.நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு 6, 7, 8-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கான சம்பளத்தை கிராம மக்கள் வழங்கி வருகின்றனர்.  இதற்காக இப்பகுதி மக்கள் ஆண்டுதோறும் பதநீர் விற்பனை செய்து அதில் கிடைக்கும் வருவாயை பள்ளி நிதியாக வைத்து அந்த பள்ளியை திறம்பட நடத்தி வருகின்றனர்.

ஆனாலும் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.