நினைத்ததை செய்து காட்டும் சிவகார்த்திகேயன்..இதெல்லாம் பெரிய விஷயம்பா..!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அடியெடுத்து வைத்த
சிவகார்த்திகேயன்
இன்று தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவர். மெரினா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சிவகார்த்திகேயன் எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரெமோ,
ரஜினி
முருகன் என தொடர் வெற்றிகளை கொடுத்து முன்னணி நடிகரானார்.

ஆனால் யானைக்கும் அடிசறுக்கும் என்பது போல இவர் நடிப்பில் வெளியான சில படங்கள் தோல்வியை சந்திக்க சிவகார்த்திகேயனின் மார்க்கெட் சற்று ஆட்டம் கண்டது. இதையடுத்து கட்டாய வெற்றியை எதிர்பார்த்துக்கொண்டிருந்த சிவகார்த்திகேயனுக்கு டாக்டர் படம் கைகொடுத்து அவரது மார்க்கெட்டை மீட்டெடுக்க உதவியது.

விஜய் & நெல்சனின் நேருக்கு நேர் நிகழ்ச்சி …காரணம் இதுதான்..!

நெல்சன்
இயக்கத்தில் வெளியான இப்படம் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது நெல்சன் பீஸ்ட் படத்திற்கு பிறகு சூப்பர்ஸ்டார் ரஜினியை இயக்கவுள்ளார்.

தலைவர் 169
என்று அழைக்கப்பட்டுவரும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இந்நிலையில் ரஜினியின் தீவிர ரசிகரான சிவகார்த்திகேயன் தலைவர் 169 படத்தில் ரஜினியுடன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

ரஜினி

நெல்சனிடம் எவ்வளவு சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் சரி நான் தலைவருடன் நடிக்கவேண்டும் என்று கூறினாராம் சிவகார்த்திகேயன். இதனையடுத்து நெல்சன் சிவகார்த்திகேயனை ரஜினியுடன் நடிக்கவைக்க உள்ளதாக தெரிகின்றது.

ரஜினி

மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் ரஜினியின் மகனாக நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. இதனைப்பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உ பி யில் இருக்கும் வெறித்தனமான ரஜினி ரசிகர்!

அடுத்த செய்தியாருக்காக இதெல்லாம் பண்றீங்க..?: ஐஸ்வர்யாவின் பதிவால் குழம்பிய ரசிகர்கள்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.