பெண்கள் உலககோப்பை தொடரின் கனவு அணி அறிவிப்பு- இந்திய வீராங்கனைகள் யாரும் இடம்பெறவில்லை

துபாய்,
12-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்றது. இதில் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி 7-வது முறையாக கோப்பையை வென்றது. இந்திய பெண்கள் அணி லீக் சுற்றிலேயே வெளியேறியது. 

இந்நிலையில் 2022-ம் ஆண்டுக்கான பெண்கள் உலகக்கோப்பை கனவு அணியை ஐசிசி வெளியிட்டது. இந்த அணியில் 4 ஆஸ்திரேலியா வீராங்கனைகள். தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணியில் 3 வீராங்கனைகள். வெஸ்ட் இண்டீஸ், வங்காள தேச அணி ஒருவரும் இடம் பிடித்தனர். கேப்டனாக ஆஸ்திரேலிய அணியின் லனிங் தேர்வு செய்யப்பட்டார்.
இந்தியா, பாகிஸ்தான் அணியில் இருந்து ஒருவர் கூட இடம் பிடிக்கவில்லை. ஐசிசி-ன் கனவு அணியில் இடம் பிடித்த வீராங்கனைகள் விவரம்:-
லாரா வோல்வார்ட் (தென் ஆப்பிரிக்கா), அலிசா ஹீலி (ஆஸ்திரேலியா), மெக் லானிங் (கேப்டன்) (ஆஸ்திரேலியா), ரேச்சல் ஹெய்ன்ஸ் (ஆஸ்திரேலியா), நாட் ஸ்கிவர் (இங்கிலாந்து), பெத் மூனி (ஆஸ்திரேலியா), ஹேலி மேத்யூஸ் (வெஸ்ட் இண்டீஸ்), மரிசான் கேப் (தென் ஆப்பிரிக்கா), சோஃபி எக்லெஸ்டோன் (இங்கிலாந்து), ஷப்னிம் இஸ்மாயில் (தென் ஆப்பிரிக்கா), சல்மா காதுன் (வங்காளதேசம்) சார்லி டீன் (இங்கிலாந்து)

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.