பத்தரமுல்லையில் இன்று இடம்பெற்ற மக்கள் போராட்டத்தில் கலந்துகொள்ள முற்பட்ட ஜனசெத பெரமுனவின் தலைவர் பத்தரமுல்லே சீலரதன தேரரை கலந்து கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் திருப்பி அனுப்பியுள்ளனர்.
பத்தரமுல்லே சீலரதன தேரர், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடத்திற்கு வருகைத் தந்த வேளை அவர் மீது ஆத்திரமடைந்த மக்கள் அந்த இடத்தில் இருந்து அவரை விரட்டியுள்ளனர்.
அவருக்கு பேசுவதற்கான சந்தர்ப்பத்தையும் வழங்க பொதுமக்கள் மறுத்துள்ளனர்.
போராட்டக்காரர்களால் வெளியேறுமாறு பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, பத்தரமுல்லே சீலரதன தேரர் போராட்டத்தை கைவிட்டு வெளியேறினார்.
“It is because of the people like you, we suffer today like this”
Battaramula Seelarathna thero, who came to take part in a protest in Battamurala has been chased away by the people engaged in the protest. #SriLanka pic.twitter.com/jwZfuJm3Uh
— Kavinthan (@Kavinthans) April 4, 2022