97.5 சதவீதம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி- அமைச்சர் ஐ.பெரியசாமி

கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் வரை அடகு வைக்கப்பட்ட நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய அரசு உத்தரவிட்டது. அதன்பிறகு பயனாளிகளின் விவரங்கள் சேகரிக்கும் பணி நடைபெற்று வந்தன. பின்னர், கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதிக்குள் 5 சவரன் வரை அடகு வைக்கப்பட்ட நகைக்கடன்களை தள்ளுபடி செய்து தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில், தமிழகத்தில் ரூ.5200 கோடி நகைக்கடன் தள்ளுபடி செய்ய திட்டமிடப்பட்டு 97.5 சதவீத கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், 12.19 லட்சம் பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்..
சுங்கச்சாவடி கட்டண உயர்வால் பொதுமக்கள் பாதிப்பு- மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன் பேச்சு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.