இரட்டை இலைச் சின்னம் தொடர்பான வழக்கி சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகரை செய்ததாக அமலாக்கத்துறை தகவல்

சட்டவிரோத பணப் பரிவர்த்தணை தொடர்பான வழக்கில் சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகரை, இரட்டை இலை சின்னம்  தொடர்பான மற்றொரு பண மோசடி வழக்கில் கைது செய்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொழிலதிபர் மனைவியிடம் 200 கோடி ரூபாய் வரை பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் சுகேஷ் சந்திரசேகரை கைது செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அவருடன் தொடர்பில் இருந்ததாக பாலிவுட் நடிகைகள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2017ஆம் இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க பேரம் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் சுகேஷ் சந்திரசேகரை கைது செய்து விசாரித்து வருவதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.