இளசுகளை ஆட்டம் போட வைக்கும் பிரபல் நடிகையின் ஐட்டம் பாடல்…!

நடிகை ஆண்ட்ரியா
வெப்
படத்துக்காக மற்றொரு ஐட்டம் பாடலை பாடி அனைவரையும் ஆட்டம் போட வைத்துள்ளார்.பிரபல பாடகியாக இருந்து நடிகையாக
ஆண்ட்ரியா
தனது முதல் பதிப்பாக இயக்குனர் செல்வராகவனின் “
ஆயிரத்தில் ஒருவன்
” படத்தின் மூலம் அறிமுகமானார்.

தரமணியில் நாயகியாக தோன்றிய இவருக்கு கமலுடன் நடிக்கும் மாபெரும் வாய்ப்பு கிடைத்தது. விஸ்வரூபம் இரண்டு பாகங்களிலும் நடித்துள்ளார்.வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான
வடசென்னை
திரைப்படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

இது ஒரு வித சர்வாதிகாரம் இல்லையா? கொந்தளிக்கும் பிரபல இயக்குநர்!

தற்போது மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி உள்ள பிசாசு 2 திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.நடிகை,பாடகி என பன்முகத் தன்மை கொண்ட ஆண்ட்ரியா சமீபத்தில் வெளியாக
புஷ்பா
திரைப்படத்தில் , உ சொல்றியா மாமா.. ஊஊ சொல்லியா மாமா பாடலை பாடி இருந்தார்.

ஆண்ட்ரியாவின் குரல், சமந்தாவின் ஆட்டம் என பட்டிதொட்டி ஹிட்டடித்து அனைவரையும் ஆட்டம் போடவைத்தது.இந்நிலையில், நட்டி மற்றும்
ஷில்பா மஞ்சுநாத்
நடிக்கும் வெப் படத்துக்காக ஆண்ட்ரியா பாடல் ஒன்றை பாடி உள்ளார். புஷ்பா பாடல் போல இந்த பாடலும் இளசுகளை ஆட்டம்போடவைக்கும் என்று கூறப்படுகிறது.

வீக்கெண்ட் வந்தா ஏத்திக்கிட்டு ஆகிடலாம் ஹை.. இரவு முடியும் வரை… நீ ஆடு.. ” எனும் பப் பாடலை பாடியுள்ளார். பாடலை
மிர்ச்சி விஜய்
எழுதியுள்ளார். இந்த மாத இறுதியில் படத்தின் பாடல் வெளியாக உள்ள நிலையில், அடுத்த மாதம் வெப் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகி உள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஹாரூன் இயக்கியுள்ளார். மொட்ட ராஜேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கார்த்திக் ராஜா
இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கிறிஸ்டோபர் ஜோசப் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு படத்தொகுப்பை சுதர்சன் மேற்கொள்கிறார்.

Sila Nerangalil Sila Manithargal – மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!

அடுத்த செய்திதனுஷுக்குனே கெளம்பி வருவாங்களோ?: ‘அவர்’ வில்லங்க பார்ட்டியாச்சே

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.