உக்ரைன் விவகாரம்: மக்களவையில் நாளை பதிலளிக்கிறார் ஜெய்சங்கர்

புதுடெல்லி,
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தற்போது நடைபெற்று வருகிறது. அதில் உக்ரைன் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என பல்வேறு கட்சிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பாக லோக்சபா எம்.பி., பிரேம் சந்திரன், காங். எம்.பி. மணீஷ் திவாரி ஆகியோர் , அரசியலமைப்பு சட்டம் விதி 193-ன் கீழ் விவாதம் நடத்திட கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், உக்ரைன் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தின் மக்களவையில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நாளை பதிலளிக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை, மாநிலங்களவையில் கடந்த 15-ம் தேதி வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் உக்ரைன் விவகாரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.