ஐபிஎல் கிரிக்கெட் : பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பட்லர்- படிக்கல் ஜோடி நிதான ஆட்டம்

 மும்பை,
ஐபிஎல் தொடரில் இன்று நடந்து வரும் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மட்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற  பெங்களூரு அணியின் கேப்டன் டூ பிளேசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி தொடக்க வீரர்களாக ராஜஸ்தான் அணியின் ஜெய்ஸ்வால் – பட்லர் களமிறங்கினர்.

ஜெய்ஸ்வால்  6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் டேவிட் வில்லி பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதை தொடர்ந்து தேவ்தத் படிக்கல் களமிறங்கினார். பட்லர் – படிக்கல் ஜோடி நிதானமாக விளையாடி அணியின் ரன் கணக்கை உயர்த்தினர்.
படிக்கல் 35 ரன்களை கடந்தும்,  பட்லர் 29 ரன்களை கடந்தும் விளையாடி வருகின்றனர். தற்போது வரை ராஜஸ்தான் அணி 9 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் குவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.