கொரோனா தொற்று 795 ஆக குறைந்தது

புதுடெல்லி:  ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: நேற்று காலை வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றினால் புதிதாக 795 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 29 ஆயிரத்து 839 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு  எண்ணிக்கையும் குறைந்து வந்த நிலையில் நேற்று சற்று அதிகரித்துள்ளளது. குறிப்பாக கேரளாவில் 56 ஏற்பட்ட கொரோனா மரணங்கள் உட்பட 58 புதிய பலிகள் பதிவாகி உள்ளது. மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கையானது 5 லட்சத்து 21 ஆயிரத்து 416 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 12,504 ஆக குறைந்துள்ளது. குணமடைவோர் சதவீதம் 98.76 ஆக இருக்கின்றது. தினசரி தொற்று பாதிப்பு 0.17 சதவீதமாகவும், வாராந்திர தொற்று பாதிப்பு 0.22 சதவீதமாகவும் உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 184.87 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.