கோழிக்கோட்டில் சுற்றுலா வந்த புதுமண தம்பதி செல்பி எடுக்க முயன்றபோது ஆற்றுக்குள் தவறி விழுந்ததில் மணமகன் பரிதாபமாக பலி.!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் சுற்றுலா வந்த புதுமண தம்பதி செல்பி எடுக்க முயன்றபோது ஆற்றுக்குள் தவறி விழுந்ததில் மணமகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

கேரளாவை சேர்ந்த ரஜி லால் என்பவருக்கு கடந்த மார்ச் 14ஆம் தேதி திருமணம் நடைபெற்ற நிலையில் கோழிக்கோட்டில் ஜானகி காடு என்னும் பகுதியில் உள்ள குற்றியாடி ஆற்றுப்பகுதியில் குடும்பத்துடன் சுற்றுலா வந்துள்ளார்.

அப்போது அங்குள்ள பாறைகளின் மீது மனைவியுடன் ஏறி செல்பி எடுக்க முயன்றதில்,  இருவரும் கால் இடறி ஆற்றுக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அலறல் சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள் இருவரையும் மீட்ட நிலையில் ரஜி லால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது மனைவி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செல்பி மோகத்தால்  மணமகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.