தீப்பெட்டி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.. பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.

படந்தால் மருதுபாண்டியன் நகரில் குணசேகரன் என்பவருக்குச் சொந்தமான தீப்பெட்டி தொழிற்சாலையில் வழக்கம் போல் தொழிலாளர்கள் தீப்பெட்டி பண்டல்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த தீக்குச்சி மூட்டைகளில் ஏற்பட்ட உராய்வினால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் தயார் செய்து வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான தீப்பெட்டி பண்டல்களில் தீப்பற்றிக் கொளுந்துவிட்டு எரிந்தது.

தீப்பற்றியவுடன் பணியாளர்கள் உடனடியாக வெளியேறியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில் தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.