மகாராஷ்டிராவில் தாகத்தில் தவித்த குரங்கிற்கு போக்குவரத்து காவலர் பாட்டிலில் தண்ணீர் வழங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.!

மகாராஷ்டிராவில் தாகத்தில் தவித்த குரங்கு ஒன்றிற்கு போக்குவரத்து காவலர் ஒருவர் பாட்டிலில் தண்ணீர் வழங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Malshej Ghat பகுதியில் Sanjay Ghude என்ற போக்குவரத்து காவலர் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது கொளுத்தும் வெயிலில் குரங்கு ஒன்று தாகத்தால் தவிப்பதை பார்த்த அவர் தன்னிடம் இருந்த தண்ணீர் பாட்டிலை திறந்து அதனிடம் கொடுத்தார்.

அந்த குரங்கும் சமர்த்தாக தண்ணீர் பாட்டிலை கைகளால் பிடித்து கொண்டு அதில் இருந்த தண்ணீரை மடமடவென குடித்து தாகத்தை தீர்த்துக் கொண்டது. போக்குவரத்து காவலரின் இந்த மனிதநேய செயல் இணையதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.