மறு உத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு – அரசு அதிரடி உத்தரவு!

கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, அமலில் உள்ள முழு ஊரடங்கை மறு உத்தரவு வரும் வரை நீட்டித்து அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் பிறப்பிடமாகக் கருதப்படும் அண்டை நாடான சீனாவில், கொரோனா வைரஸ் தொற்றின் நான்காவது அலை கோரத் தாண்டவமாடி வருகிறது. ஒமைக்ரான் வகை தொற்றின் திரிபான பிஏ 2 வைரஸ் வேகமாகப் பரவி வருவதால், சீன அரசு திண்டாடி வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஏற்கனவே, சாஞ்சுன், ஜலின், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில்
முழு ஊரடங்கு
உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு சீனாவில் கொரோனா பரவல் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்நிலையில், சீனாவின் பெரிய நகரமான சுமார் 2.6 கோடி மக்கள் வசிக்கும் ஷாங்காயில், கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருவதால், அமலில் உள்ள முழு ஊரடங்கை மறு உத்தரவு வரும் வரை நீட்டித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஷாங்காய் நகரில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 13 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஷாங்காயில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 73 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

இன்று நள்ளிரவு வரை முழு ஊரடங்கு – அரசு அதிரடி உத்தரவு!

ஷாங்காய் நகரில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சுமார் 10 ஆயிரம் மருத்துவப் பணியாளர்களை சீன அரசு அங்கு அனுப்பி உள்ளது. இதில் 2,000 பேர் ராணுவ மருத்துவப் பணியாளர்கள். இதற்கிடையே, தற்போது அமலில் உள்ள கட்டுப்பாடுகளுடன் மேலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருவது சீன மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

அடுத்த செய்திஇன்று நள்ளிரவு வரை முழு ஊரடங்கு – அரசு அதிரடி உத்தரவு!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.