லட்சுமி நரசிம்ம சுவாமி மஹா கும்பாபிஷேகம்| Dinamalar

தங்கவயல் : கோரமண்டல் சுவாமிநாதபுரம் மெயின் ரோட்டில் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் பிரதிஷ்டாபனை மற்றும் மஹா கும்பாபிஷேகம் நேற்று துவங்கியது. நாளை வரை நடக்கிறது.நேற்று மாலை ஸ்ரீ விஸ்வக்சேனாராதனம், புண்யாஹவாசனம், ஸ்ரீ மகா கணபதி ஹோமம், அனுக்ஞை, சபா பிரார்த்தனை, கோ பூஜை, த்வஜாரோகனம், ரக் ஷா பந்தனம், வாஸ்து ஹோமம், வாஸ்து பலி, திருவாராதனம், சாத்துமறை, தீர்த்த பிரசாத வினியோகம் நடந்தது.

இன்று காலை மங்கள வாத்தியம், வேதபாராயணம், பிரபந்த, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், மங்கள வாத்தியம், தீர்த்த பிரசாத வினியோகம் நடக்கிறது.நாளை காலை சுப்ரபாத சேவை, வேத பாராயணம், சேவாகாலம், சுப மங்களத்திற்கு பின், மஹா கும்பாபிஷேகம், நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலையில் ‘ஹரே கிருஷ்ணா’ குழுவின் சுபானந்த தாசர் தலைமையில் ஹரிநாம சங்கீர்த்தனம், மணவாள மாமுனி சுவாமி சன்னதியின் பஜனை, சிவநாராயணனின் ஹரிகதை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.அனைத்து பூஜைகளையும் கிருஷ்ணகிரி பரந்தாமன் சுவாமி, திருப்பதி ரகுபட்டர், கோவில் அர்ச்சகர் ராமானுஜம், சிவ நாராயணன், குசேலன் செய்துள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.