அமெரிக்க பார்லி வளாகத்தில் நரி கடித்து எம்.பி., காயம்| Dinamalar

வாஷிங்டன்:அமெரிக்காவில் பார்லி., வளாகத்தில் நடந்து சென்று கொண்டிருந்த இந்திய வம்சாவளி எம்.பி., நரி கடித்து காயம் அடைந்தார்.
அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியான ஆமி பெரா, 57, குடியரசு கட்சி எம்.பி.,யாக உள்ளார். இவர் நேற்று, பார்லி.,யில் நடந்து சென்ற போது, நரி ஒன்று பாய்ந்து வந்து கடித்தது. அலறல் கேட்டு காவலர்கள் ஓடி வந்ததும், நரி தப்பி ஓடியது.
இந்நிலையில், தேசிய ராணுவ மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்ட ஆமி பெராவுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பின், போலீசார் பார்லி., வளாகத்தில் தேடுதல் வேட்டை நடத்தி அந்த நரியை பிடித்தனர். நரி வனப்பகுதியில் விடப்படும் என போலீசார் கூறினர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.